states

img

பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை

விளைப் பொருட்க ளுக்கு ஆதார விலை  உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் பகுதிகளைச் சேர்ந்த  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள், பல்லாயிரக்கணக் கான டிராக்டர்களுடன் தில்லியில்  போராட்டம் நடத்த தொடர்ந்து  5-ஆவது நாட்களாக ஹரியானா - தில்லி, உத்தரப்பிரதேசம் - எல்லைகளில் குவிந்துள்ளனர்.

போராடும் விவசாயிகளின்  முக்கிய கோரிக்கைகளில் ஒன் றான விளைப்பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்வு தொடர்பாக, காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில அரசு தனது 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் நிதி இலாகாவை தன்வசம் வைத் திருக்கும் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பட்ஜெட்டில் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வை அறிவித்துள்ளார். ]

வரவேற்பு
பட்ஜெட்டில் அவர் மேலும் கூறுகையில், ”பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை யை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.45 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.38லிருந்து ரூ.55 ஆகவும் உயரும். விவசாயத் துறைக்கு ரூ.582 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ. 300 கோடியும் ஒதுக்கீடு செய் யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழைக்கான பேரிடர் நிவா ரண நிதியாக ரூ.4,500 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இமாச்சல்  பிரதேசத்தின் தனி அடையாள மான ஆப்பிள் விற்பனையை சர்வதேச அளவில் முன்னிலைப் படுத்தும் வகையில், ஆப்பிள்  பேக்கேஜிங்கிற்காக உலகளா விய அட்டைப்பெட்டிகள் அறி முகப்படுத்தப்படும்” என பல்  வேறு அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளார்.

விவசாயிகளின் போராட் டத்துக்கு மத்தியில் காங்கிரஸ் ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசம் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தந்திருப்பது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இமாச்  சல் காங்கிரஸ் அரசின் பட்ஜெட்  மகிழ்ச்சி அளிக்கிறது என விவ சாயிகள் சமூகவலைத்தளங்க ளில் கருத்து தெரிவித்து வரு கின்றனர். 

தில்லி எல்லையில் விவசாய  போராட்டத்தை ஒடுக்க தீவிர மாக களமிறங்கியுள்ள சூழலில் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு  விலை உயர்வை அறிவித்துள்ள இமாச்சல் காங்கிரஸ் அரசின் முடிவு மோடி அரசிற்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.